மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி இஸ்ரேலிய பிரஜை பரிதாப மரணம்!

Date:

பொத்துவில் -அக்கரைப்பற்று வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி இஸ்ரேலிய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தானது நேற்று (01) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, 23 வயதான இஸ்ரேலிய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொத்துவில் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் அதே திசையில் பயணித்த உழவு இயந்திரத்தின் பின்புறத்தில் மோதியுள்ளது.

இதன்போது, மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான இஸ்ரேலிய பிரஜை படுகாயமடைந்த நிலையில் பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்தநிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...