அக்குறணை தீ கட்டுப்பாட்டுக்குள்: பல கோடி ரூபா பெறுமதியான உடைமைகள் சேதம்

Date:

அக்குறணை நகரத்திலுள்ள பிரபல  கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ தற்போது முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆயினும் குறித்த கட்டடம் தீயினால் முற்றாக சேதமடைந்துள்ளது.

இன்று (05) வௌ்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ காரணமாக அக்குறணை A9 வீதியில் அமைந்துள்ள மேற்படி கட்டடம் முற்றாகச் சேதமடைந்துள்ளதுடன் கண்டி மாநகர சபை தீ அணைப்புப் பிரிவினரும் பொலிசாரும், பிரதேச மக்களும் இணைந்து அருகில் உள்ள கட்டடங்களுக்கு தீ பரவுவதை கட்டுப்படுத்தினர்.

வௌ்ளிக்கிழமை காலை 8.00 மணி முதல் கண்டி – மாத்தனை பிரதான வீதியில் அக்குறணை பிரதேச வீதி மூடப்பட்டிருந்தது. கண்டி- மாத்தளை வீதி வழியாகப் பயணிக்கும் தூர இடங்களுக்கான பஸ்கள் மற்றும் வாகனங்கள் வத்துகாமம் வழியாக அனுப்பட்டட்டன.
அக்குறணை 6ஆம் மைல்கல் மற்றும் 7ஆம் மைல்கல் பிரதேசங்களுக்கு இடைப்பட்ட முன்னாள் பெயார்லைன் ஆடைத் தொழிற்சாலை அமைந்திருந்த இடத்தில் உள்ள உணவகம் மற்றும் வெதுப்பகமே இவ்வாறு தீப்பற்றியுள்ளது. இதன் காரணமாக பல கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இங்கு சுமார் 50 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இருந்ததாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்தாகவும், இதனால் தீயைக் கட்டுப்படுத்துவதில் சிரமங்கள் ஏற்பட்டதாவும் பொலிசார் தெரிவித்தனர்.
தீ ஏற்படக் காரணம் என்னவென இன்னும் அறியப்படாத நிலையில், அளவத்துகொடைப் பொலிசார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...