சட்டமா அதிபர் ஒப்புதலளித்துள்ள உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுச் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சட்டவரைஞரால் வரைவாக்கம் செய்யப்பட்டுள்ள உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுச் சட்டமூலம் தொடர்பாக ஆர்வங் காட்டுகின்ற தரப்பினர்களால் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களைக் கருத்தில் கொண்டு, குறித்த சட்டமூலத்தைத் திருத்தம் செய்து புதிய சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக கடந்த 15ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது.
குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதியவர்களும், வெளிநாட்டலுவல்கள் அமைச்சரும், நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.