தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் விளையாட்டு வீரர்களுக்கு கௌரவிப்பு

Date:

தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இன்று (8) விளையாட்டு வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு அதிபர்  பர்ஜானா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின்போது உயரம் பாய்தல் மற்றும் நீளம் பாய்தல் போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற 14 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.

இதில் பிரதம அதிதியாக தூய தேசத்திற்கான இயக்கத்தின் உயர்நிலை உறுப்பினரான ஸாதிர் அவர்கள், தூய தேசத்திற்கான இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரும் சமூக செயற்பாட்டாளருமான செப்f ஜவாத் அவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினரான அஷ்ஷெய்க் மௌலவி ஏ. எம். அப்துல் மலிக் அவர்களும் கலந்துகொண்டனர்.

அவர்களுக்கான பரிசில்கள் மற்றும் பணப்பரிசினை தூய தேசத்திற்கான இயக்கம்
(Clean Nation ) வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான விண்ணப்பங்கள் மே 19 வரை நீடிப்பு

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக பிரவேசத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மே மாதம்...

மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று

2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த...

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயத்தின் (ITCZ) தாக்கமும்  மற்றும் இலங்கைக்கு...

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...