ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற வெற்றிடம்: நியமிக்கப்படவுள்ள கட்சி உறுப்பினர்

Date:

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு பந்துலால் பண்டாரிகொட  நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகிய இருவரினதும் கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் நேற்று (09) தீர்ப்பு வழங்கியது.

இந்த நிலையில், மனுஷ நாணயக்காரவின் கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டதை தொடர்ந்து வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பந்துலால் பண்டாரிகொடவை நியமிக்க தீர்மானம் எட்டப்படவுள்ளது.

2020 பொதுத் தேர்தலில் காலி (Galle) மாவட்டத்தில் 34,897 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பெற்ற பண்டாரிகொட, ஐக்கிய மக்கள் சக்தியின் விருப்பு வாக்கு பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ளார்.

இதேவேளை, ஹரின் பெர்னாண்டோவினால் (Harin Fernando) வெற்றிடமாகவுள்ள ஆசனத்தை நிரப்புவதற்கான உறுப்பினர் தொடர்பில்  இன்னும் தீர்மானிக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...