காலிதா ஸியாவை முன்னரே விடுவித்திருந்தால் ஷேக் ஹசீனாவுக்கு இந்த நிலைமை வந்திருக்காது: ஜனாதிபதி

Date:

“ஷேக் ஹசீனா ஒரு படி முன்னதாகவே நடவடிக்கைகளை எடுத்து இருந்தால், இன்று பங்களாதேஷில் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டிருக்காது” என, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (06) முற்பகல் கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் ஆரம்பமான “2024 சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுகை” (ESG) மாநாட்டில் உரையாற்றும் போதே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“நமது நட்பு நாடான பங்களாதேஷின் அரசியலைப் பற்றி நான் பேச விரும்பவில்லை. ஆனால், அதைப் பற்றி நான் ஒன்றைக் குறிப்பிட வேண்டும்.

ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை விட்டு வெளியேறினாலும், நாங்கள் மிகவும் கடினமான சூழ்நிலையில் இருந்தபோது, அவர் நம் நாட்டிற்கு 200 மில்லியன் டாலர்களை வழங்கினார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

எனவே, இந்த நேரத்தில் உண்மையில் ஒரு நபரைப் பற்றி ஒரு நல்ல வார்த்தை கூறுவது நியாயமானது என்று நான் நினைக்கிறேன்.

இதேவேளை, காலிதா ஸியா, சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

ஷேக் ஹசீனா இதை முன்பே செய்திருந்தால், அவரால் இன்னும்பங்களாதேஷத்தின் பிரதம மந்திரியாக இருந்து இருக்கலாம். உலகின் நிலைமைகள் சரியில்லை என்பதை, இவ்வாறான நிகழ்வுகள் தெளிவுபடுத்துகின்றன” என்றார்.

( ஐ.ஏ.காதிர்கான்)

Popular

More like this
Related

வடக்கு, கிழக்கு, வடமத்திய பகுதிகளில் 100 மி.மீ. இற்கும் அதிக மழை

நாடு முழுவதும் வடகீழ் பருவப் பெயர்ச்சி நிலைமை நிலைகொண்டுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம்...

உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்டம் ஜனவரியில்..!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நடத்தப்படாது எஞ்சியுள்ள பாடங்களுக்கான பரீட்சைகளை...

அனர்த்தத்தால் சேதமடைந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு உதவி: வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்.

நாட்டில் டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரனர்த்தத்தால் அழிவடைந்த மற்றும் சேதமடைந்த வாகனங்கள்...

பாகிஸ்தான் கடல்சார் விவகாரங்களுக்கான அமைச்சர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்

பாகிஸ்தான் கடற்றொழில் மற்றும் (பெட்ரல் ) உள்ஆட்சி அமைச்சர் மொஹமட் ஜுனைத்...