காலிதா ஸியாவை முன்னரே விடுவித்திருந்தால் ஷேக் ஹசீனாவுக்கு இந்த நிலைமை வந்திருக்காது: ஜனாதிபதி

Date:

“ஷேக் ஹசீனா ஒரு படி முன்னதாகவே நடவடிக்கைகளை எடுத்து இருந்தால், இன்று பங்களாதேஷில் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டிருக்காது” என, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (06) முற்பகல் கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் ஆரம்பமான “2024 சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுகை” (ESG) மாநாட்டில் உரையாற்றும் போதே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“நமது நட்பு நாடான பங்களாதேஷின் அரசியலைப் பற்றி நான் பேச விரும்பவில்லை. ஆனால், அதைப் பற்றி நான் ஒன்றைக் குறிப்பிட வேண்டும்.

ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை விட்டு வெளியேறினாலும், நாங்கள் மிகவும் கடினமான சூழ்நிலையில் இருந்தபோது, அவர் நம் நாட்டிற்கு 200 மில்லியன் டாலர்களை வழங்கினார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

எனவே, இந்த நேரத்தில் உண்மையில் ஒரு நபரைப் பற்றி ஒரு நல்ல வார்த்தை கூறுவது நியாயமானது என்று நான் நினைக்கிறேன்.

இதேவேளை, காலிதா ஸியா, சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

ஷேக் ஹசீனா இதை முன்பே செய்திருந்தால், அவரால் இன்னும்பங்களாதேஷத்தின் பிரதம மந்திரியாக இருந்து இருக்கலாம். உலகின் நிலைமைகள் சரியில்லை என்பதை, இவ்வாறான நிகழ்வுகள் தெளிவுபடுத்துகின்றன” என்றார்.

( ஐ.ஏ.காதிர்கான்)

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன...

வியட்நாம் – இலங்கை இடையே 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 05...

தெனியாயவில் பரவும் காய்ச்சல் குறித்து ஆராய விசேட குழு!

தெனியாய வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே வேகமாகப் பரவி வரும்...

இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

2030- ஆம் ஆண்டுக்குள் ஆண்டு இருதரப்பு வர்த்தகத்தை ஒரு பில்லியன் டொலராக...