டயனா கமகேவிற்கு குற்றப்பத்திரிகை கையளிப்பு!

Date:

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு (Diana Gamage) குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தால் கையளிக்கப்பட்டுள்ளது.

இரட்டை பிரஜாவுரிமையை கொண்டிருந்தமை உள்ளிட்ட 3 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரதிவாதியான டயனா கமகேவிற்கு எதிராக திறந்த நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின் பிணை வழங்கப்பட்டுள்ளது.

25,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுவிப்பதற்கு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன உத்தரவிட்டார்.

நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய, பிரதிவாதியான டயனா கமகே தனது சட்டத்தரணியுடன் நீதிமன்றத்தில் இன்று முன்னிலையாகியிருந்தார்.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...