டெலிகிராம் நிறுவனருக்கு நிபந்தனைகளுடன் பிணை!

Date:

பிரான்ஸில் கைது செய்யப்பட்ட டெலிகிராம் செயலியின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ்  பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாவெல் துரோவை, பிரான்சில்   உள்ள போர்கேட் விமான நிலையத்தில் வைத்து கடந்த (24.8.2024) மாலை அந்நாட்டு காவல்துறையினர் அதிரடியாக கைது செய்திருந்தனர்.

டெலிகிராம் செயலியின் மூலம் நடக்கும் சட்டவிரோதச் செயல்களுக்கு டெலிகிராம் துணை போவதாகவும், பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவளிப்பதாகவும் பாவெல் துரோவ் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

அவரது கைதுக்கு பல தரப்பில் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பாவெல் துரோவ் மீதான குற்றச்சாட்டுகளை காவல்துறையினர் நீதிமன்றில் தாக்கல் செய்தனர்.

இதையடுத்து பாவெல் துரோவுக்கு பிணை வழங்கப்பட்டதுடன் 5 மில்லியன் யூரோக்கள் பிணைத்தொகை செலுத்துமாறு நீதிபதிகள் உத்தரவிட்டடுள்ளனர்.

மேலும் அவர் நீதிமன்றின் கண்காணிப்பின் கீழ் நாட்டில் இருக்க வேண்டும் எனவும் பிரான்சை  விட்டு வெளியேறக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதுடன் வாரத்திற்கு 2 முறை காவல் நிலையத்தில் முன்னிலையாக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...