டெலிகிராம் செயலி நிறுவனர் பிரான்ஸில் கைது: அரசியல் முடிவல்ல – ஜனாதிபதி மேக்ரான்

Date:

துபாயை பிறப்பிடமாகக் கொண்ட டெலிகிராம் செயலியின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான பாவெல் துரோவ் பிரான்ஸில் கைதுசெய்யப்பட்டுள்ளதை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் உறுதிப்படுத்தியுள்ளார்.

இவரது கைது எவ்விதத்திலும் அரசியல் பின்னணி அல்ல, நீதிமன்ற விசாரணையை அடிப்படையாகக் கொண்டது என தெரிவித்ததோடு பிரான்ஸ் எப்போதும் கருத்து சுதந்திரத்தை மதிப்பளிக்கும் நாடு எனவும் அவர் தெரிவித்தார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு வெளியே Bourget விமான நிலையத்தில் டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் (Pavel Durov) கைது செய்யப்பட்டார்.

டெலிகிராம் செயலியில் வன்முறையைத் தூண்டும் நடவடிக்கைகள் என பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இந்த நிலையில் பாவெல் துரோவ்வின் கைது குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மேக்ரான் விளக்கம் அளித்து ட்வீட் செய்துள்ளார்.

அவர் தனது பதிவில், “பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரான்ஸ் தொடர்பான தவறான தகவல்களைப் பார்த்தேன். கருத்து சுதந்திரம் மற்றும் தகவல் தொடர்பு, புதுமை மற்றும் தொழில்முனைவோர் உணர்வு ஆகியவற்றில், பிரான்ஸ் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் உள்ளது. அது அப்படியே இருக்கும்.

சட்டத்தின் ஆட்சியால் நிர்வகிக்கப்படும் ஒரு மாநிலத்தில், குடிமக்களைப் பாதுகாப்பதற்கும் அவர்களின் அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிப்பதற்கும், சமூக ஊடகங்களிலும் நிஜ வாழ்க்கையிலும் சுதந்திரங்கள் சட்டக் கட்டமைப்பிற்குள் நிலைநிறுத்தப்படுகின்றன.

முழு சுதந்திரத்துடன், சட்டத்தை அமுல்படுத்துவது நீதித்துறையின் கையில் உள்ளது. பிரான்ஸில்  டெலிகிராம் தலைவரின் கைது, நடந்து வரும் நீதி விசாரணையின் ஒரு பகுதியாக நடந்தது. இது எந்த வகையிலும் அரசியல் முடிவு அல்ல. இந்த விவகாரத்தில் நீதிபதிகள்தான் தீர்ப்பளிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...