#Back to Glory: சமூக ஊடகங்களின் கருத்துக் கணிப்புக்கள் குறித்து அவதானம்!

Date:

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சமூக ஊடகங்கள் கருத்துக் கணிப்புக்கள் வெளியிடுவதைத் தடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பில் தேசிய தேர்தல் ஆணைக்குழு கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த வாரம் நடைபெறவுள்ள தேர்தல் ஆணைக்குழுக் கூட்டத்திலும் இதுபற்றி கலந்துரையாடப்பட உள்ளது.

இவ்வாறான கருத்துக்கணிப்புக்களால், சில வேட்பாளர்களுக்கு பாதக நிலைமை ஏற்படுவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த கருத்தக் கணிப்புக்களை மேற்கொள்ளும் தரப்புக்கள் யார் என்பது குறித்து கண்டறியும் நோக்கில், தேர்தல் ஆணைக்குழு ஆய்வு நடத்தியும் வருகிறது.

இந்த ஆய்வின் அடிப்படையில் கருத்துக்கணிப்புக்களை தடை செய்வதற்கான வழிமுறைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

இலத்திரனியல் அல்லது அச்சு ஊடகங்களில் நடத்டதப்படும் கருத்துக் கணிப்புக்களை இரத்து செய்வது இலகுவானது என்ற போதிலும், சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் கருத்துக்கணிப்புக்களை கட்டுப்படுத்துவது சவால் மிக்கது என்றும், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...