தேர்தல் கண்காணிப்புப் பணிகளுக்காக இலங்கை வரும்ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கும், வெளிவிவகார அமைச்சுக்கும் இடையில் நிர்வாக ஏற்பாடுகள்!

Date:

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கண்காணிப்புப் பணிகளுக்காக இலங்கைக்கு வருகை தரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கும், வெளிவிவகார அமைச்சுக்கும் இடையிலான நிர்வாக ஏற்பாடுகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கண்காணிப்புப் பணிகளுக்காக இலங்கைக்கு கண்காணிப்பாளர்களை அனுப்பி வைக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளரால் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஒன்றியத்தின் ஒழுங்குவிதிகளுக்கமைய தேர்தல் கண்காணிப்பு பணிகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் இலங்கைக்கு வருகை தரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கும், வெளிவிவகார அமைச்சுக்கும் இடையிலான நிர்வாக ஏற்பாடுகளில் கையொப்பமிடப்பட வேண்டும்.

அதற்கிணங்க, இருதரப்பினருக்கும் இடையில் கடந்த 5 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு தொடர்பான நிர்வாக ஏற்பாடுகளில் கையொப்பமிடப்பட்டது.

 

 

 

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...