நாட்டில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

Date:

இலங்கையில்   இந்த வருடம் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக உள்நாட்டு இறைவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இவ்வருடம் ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை மூன்று இலட்சத்து 6, 264 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கடந்த ஆண்டு (2023) டிசம்பர் 31ஆம் திகதி வரை, மொத்த வரி செலுத்துவோர் எண்ணிக்கை ஒன்பது இலட்சத்து 97,858 ஆக இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் திகதி அன்று இந்த எண்ணிக்கை பதின்மூன்று இலட்சத்து 14,122 ஆக அதிகரித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை வரி செலுத்துவோர் எண்ணிக்கை எட்டு இலட்சத்து 79,778 ஆக பதிவாகியுள்ளது.

அத்துடன் மற்றைய வரி செலுத்துவோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து18,080 ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த ஆண்டு (2024) ஜூலை 31 ஆம் திகதி வரை வரி செலுத்துவோர் எண்ணிக்கை பதினொரு இலட்சத்து 82,210 ஆகவும், மற்ற வரி செலுத்துவோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 31,910 ஆகவும் அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், ஏற்கனவே ரி.ஐ.என் (TIN) எண்ணைப் பெற்றவர்களின் மொத்த  எண்ணிக்கை 45 இலட்சத்து 77,303 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...