மதத்தின் மீது மக்களுக்கிருக்கும் பக்தியை எமக்கெதிராக திருப்ப நினைக்கிறார்கள்: உலமா சபை சந்திப்பின் பின் அனுர

Date:

நாங்கள் பதவிக்கு வந்தால் கண்டி பெரஹர உள்ளிட்ட பெரஹராக்களை நிறுத்தப் போவதாக சிங்கள சமூகத்தில் பிரச்சாரம் நடக்கிறது. மதத்தின் மீது மக்களுக்கு இருக்கும் பக்தியை எமக்கெதிராகத் திருப்ப நினைக்கிறார்கள் என தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார கூறினார்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைமையகத்தில் இன்று (21) உலமா சபைத் தலைவருடன் நடந்த சந்திப்பைத் தொடர்ந்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆசீர்வாதம் பெற்றுக் கொள்வதும் இந்தச் சந்திப்பின் நோக்கம் எனக் குறிப்பிட்ட அவர் நாட்டின் அரசியலைப் பற்றியும் ஜனாதிபதித் தேர்தல் பற்றியும் விளக்கமளித்ததாகவும் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, பொதுச் செயலாளர் அஷ்ஷைக் அர்கம் நூரமித் மற்றும் கலாநிதி ஏ.ஏ.அஹமட் அஸ்வர் ஆகியோர் உட்பட உயர் பீட அங்கத்தவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் விஜித ஹேரத்தும் இந்தச் சந்திப்பில் இணைந்திருந்தார்.

இந்த சந்திப்பின்போது சிங்கள மொழியிலான திருக்குர்ஆன் மொழிப்பெயர்ப்பின் பிரதியொன்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைவரால் அனுரகுமார திசாநாயக்கவுக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...