மத்திய சூடானில் பதற்றம்: 80 பேர் உயிரிழப்பு!

Date:

மத்திய சூடானின் சின்னார் மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் துணை இராணுவக் குழு (RSF) நடத்திய தாக்குதலில் சுமார் 80 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் குறித்து RSF  இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது.

இதேவேளை இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் கூற்றுப்படி, சின்னார் மாநிலத்தில் இடம்பெறும் தாக்குதல்கள் காரணமாக 7,25,000க்கும் அதிகமான மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் சமீபத்திய ஐ.நா தரவுகளின்படி, சூடானிலிருந்து சுமார் 2.2 மில்லியன் மக்கள் வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...