மொட்டின் ஜனாதிபதி வேட்பாளர் தம்மிக்க பெரேரா !

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்படவுள்ளதாக மொட்டுக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி எதிர்வரும் 7ஆம் திகதி பொதுஜன பெரமுன வேட்பாளராக தம்மிக்க பெரேராவை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளது. இது தொடர்பான நிறுவன நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக கட்சி வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கட்சித் தலைமையகத்தில் எதிர்வரும் நாட்களில் பல சுற்று கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை இந்த வாரத்திற்கு முன்னர் அறிவிக்கத் தயாராக இருந்த போதிலும், நிலவும் சூழ்நிலை காரணமாக அது தாமதமானது.

ஜனாதிபதி வேட்பாளராக காத்திருக்கும் நால்வர் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்ற நிலையில் அவர்களில் பெரும்பாலானோர் தம்மிக்க பெரேராவுக்கு தமது விருப்பத்தை வெளிப்படுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...