யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா நாளை ஆரம்பம்!

Date:

‘யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா – 2024’ நாளை (09) ஆரம்பமாகி எதிர்வரும் மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளன.

யாழ்ப்பாணத்தில், உள்ளூர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில், யாழ்ப்பாண வர்த்தகத் தொழிற்துறை மன்றமானது இந்த புத்தக கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.

 

அதன்படி, இந்த புத்தக திருவிழாவானது, யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில் நாளை (09) காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(11) மாலை வரை நடைபெறவுள்ளது.

 

இலங்கையிலிருந்து மட்டுமன்றி, பல்வேறு நாடுகளில் இருந்து பல்வேறுபட்ட புத்தக விற்பனை நிறுவனங்கள் மற்றும் வெளியீட்டகங்களின் புத்தகங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...