வாகன உரிமையாளர்களுக்கு முக்கிய தகவல்!

Date:

இலங்கையில் வருடாந்தம் நடத்தப்படும் வாகன புகை பரிசோதனையில் 20 வீதமான வாகனங்கள் தோல்வியடைவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில்  (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பரிசோதனை செய்யும் வாகனங்கள் தரமானதாக இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், வாகன புகைப்பரிசோதனை சான்றிதழை பெற்றுக்கொள்வதோடு, வாகன அனுமதிப்பத்திரம் மற்றும் காப்புறுதி போன்றவற்றையும் ஒரே இடத்தில் வழங்குவதற்கு தேவையான வேலைத்திட்டம் தயாரிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில் இரண்டு மாதங்களுக்குள் இந்த வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண உறுதியளித்துள்ளார்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...