வான் சாகசத்தில் ஈடுபட்ட இரு இராணுவ வீரர்கள் படுகாயம்

Date:

 

வெல்லவாய ஊவா குடாஓயா கமாண்டோ ரெஜிமெண்ட் பயிற்சி நிலையத்தில் இன்று சனிக்கிழமை (03) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வான் சாகச நிகழ்வின் போது இடம்பெற்ற விபத்தில்  இரண்டு இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையத்தில் பயிற்சிகளைப் பெற்று வெளியேறும் இராணுவ வீரர்களுக்காக விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது, வான் சாகசத்தில் ஈடுபட்ட இரண்டு வீரர்களே விபத்தில் சிக்கியுள்ளனர். இவர்களில் ஒருவரது பரசூட் மரங்கள் நிறைந்த பகுதியிலும் மற்றையவரது பரசூட் தரையிலும் விழுந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த இரண்டு வீரர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், இந்த நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேயும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...