அதிகரிக்கும் தேர்தல் வன்முறைகள்: நாடு முழுவதும் 54ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு பணியில்!

Date:

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கடமைகளுக்காக 54,000 பொலிஸாரை ஈடுபடுத்தவுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அசங்க கரவிட்ட தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு நாட்டின் சகல பிரதேசங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸாரின் அறிவுறுத்தல்களை அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டும் என்பதுடன், வன்முறைகள் மற்றும் முரண்பாடுகளை தவிர்க்க பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த பதாகைகளை நீக்குவதற்காக 1500 தற்காலிக தொழிலாளர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் இடம்பெறும் சட்டவிரோத தேர்தல் பிரசார செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

அனைத்து பொலிஸ் பிரிவுகளையும் மையப்படுத்தி பாதுகாப்பு செயற்றிட்டமொன்று வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளதுடன், நாடு முழுவதும் 54ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு பணிகளுக்காக அமர்த்தப்பட்டுள்ளனர்.” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

Popular

More like this
Related

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...