அதிகரிக்கும் தேர்தல் வன்முறைகள்: நாடு முழுவதும் 54ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு பணியில்!

Date:

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கடமைகளுக்காக 54,000 பொலிஸாரை ஈடுபடுத்தவுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அசங்க கரவிட்ட தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு நாட்டின் சகல பிரதேசங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸாரின் அறிவுறுத்தல்களை அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டும் என்பதுடன், வன்முறைகள் மற்றும் முரண்பாடுகளை தவிர்க்க பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த பதாகைகளை நீக்குவதற்காக 1500 தற்காலிக தொழிலாளர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் இடம்பெறும் சட்டவிரோத தேர்தல் பிரசார செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

அனைத்து பொலிஸ் பிரிவுகளையும் மையப்படுத்தி பாதுகாப்பு செயற்றிட்டமொன்று வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளதுடன், நாடு முழுவதும் 54ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு பணிகளுக்காக அமர்த்தப்பட்டுள்ளனர்.” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...