இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து நீக்க தீர்மானம் நிறைவேற்றம்!

Date:

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து ஜனாதிபதி சட்டத்தரணி கௌசல்ய நவரத்ன விலக வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சட்டத்தரணிகள் சபை  தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.

இன்று (31) கூடி இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி சட்டத்தரணி கௌசல்ய நவரத்ன பணத்தை தவறான முறையில் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜப்பானின் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) 2023 ஆம் ஆண்டின் இறுதிப் பாதியில் ஊழலுக்கு எதிரான திட்டமொன்றிற்கான விலைமனுக்களை அழைத்திருந்ததுடன், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சமர்ப்பித்த பின்னர், சங்கத்திற்கு 24 மில்லியன் ரூபா நிதி கிடைத்தது.

எவ்வாறாயினும்,  ஏலம் எடுப்பதிலும் ஒப்பந்தங்களில் ஈடுபடுவதிலும் வெளிப்படைத்தன்மையின்றி செயற்பட்டமை தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கௌசல்யா நவரத்ன,  உப தலைவர் நலிந்த இந்ததிஸ்ஸ, ஜனாதிபதி  சட்டத்தரணி ஷவீந்திர பெர்னாண்டோ, சட்டத்தரணி நுவான் டி அல்விஸ் மற்றும் சட்டத்தரணி ரஷ்மினி இந்ததிஸ்ஸ ஆகியோர் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

இன்றையதினம் (11) நாட்டின் கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...