எலான் மஸ்கிற்கு கெடு விதித்த நீதிமன்றம்; பிரேசிலில் ‘எக்ஸ்’ தளத்திற்கு தடை

Date:

பிரபல சமூகவலைதளமான x நிறுவனத்திற்கு பிரேசில் உச்ச நீதிமன்றத்தால் கெடு விதிக்கப்பட்டுள்ளது.

எலான் மஸ்க் டிவிட்டரை வாங்கி எக்ஸ் என பெயர் மாற்றிய பின்னர் அதில் பல மாற்றங்களைக் கொண்டுவந்தார்.

பெரிய அளவில் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து தளத்தில் பல திருத்தங்களை மேற்கொண்டார்.

எனினும் அண்மையில் பிரேசில் நாட்டில் எக்ஸ் தளம் மீது விதிக்கப்பட்ட புதிய தணிக்கை உத்தரவுகளால், அங்குள்ள எக்ஸ் அலுவலகத்தை மொத்தமாக மூடி ஊழியர்களை அதிரடியாக நீக்கினார்.

மேலும், அலுவலகம் மூடப்பட்டாலும் பிரேசிலில் எக்ஸ் சேவைகள் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதுதொடர்பான வழக்கை விசாரித்து வரும் பிரேசில் உச்ச நீதிமன்றம், பிரேசில் நாட்டில் X தளத்திற்கான சட்ட விவகார பிரதிநிதியை அடுத்த 24 மணி நேரத்தில் நியமிக்க வேண்டும்.

இவ்வாறு செய்ய தவறினால் பிரேசிலில் எக்ஸ் தளம் முடக்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், கூகுள், ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் ‘எக்ஸ்’ செயலியை தடுக்கும் தொழில்நுட்ப தடைகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் வி.பி.என்.(VPN) மூலம் ‘எக்ஸ்’ செயலியை  பிரேசில் மக்கள் பயன்படுத்தினால் 8,874 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7,44,000) அபராதம் விதிக்கப்படும் என்றும் நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டிமொரேஸ் தெரிவித்தார்.

இந்த உத்தரவை கடுமையாக விமர்சித்துள்ள எலான் மஸ்க், “சுதந்திரமான பேச்சு என்பது ஜனநாயகத்தின் அடித்தளம். பிரேசிலில் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு போலி நீதிபதி அதை அரசியல் நோக்கங்களுக்காக அழித்து வருகிறார்” என்று விமர்சித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கை – ஈரான் வெளிவிவகார அமைச்சர்களிடையே தொலைபேசி உரையாடல்!

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் வெளிவிவகார அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சியும், இலங்கை...

நிதி அமைச்சில் சைபர் கொள்ளை: CID விசாரணை தீவிரம்!

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார வளர்ச்சி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின்...

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. மழைவீழ்ச்சி

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பரிந்துரைகளை அமுல்படுத்த விசேட நிபுணர் குழு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கும் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான...