ஊடகவியலாளர்களுக்கான விசேட திட்டம் : ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு

Date:

எதிர்வரும் புதிய நாடாளுமன்றத்தின் கீழ் உள்ளூர் ஊடகவியலாளர்களின் பிரச்சினைகள் மற்றும் முறைப்பாடுகளை முன்வைப்பதற்கு ஊடக ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கும் அவர்களின் சேவை ஒப்பந்தங்கள் தொடர்பில் ஆராயும் அதிகாரம் வழங்குவதற்கும் கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நாடு தழுவிய ஊடகவியலாளர்கள் அமைப்பின் உள்ளூர் ஊடகவியலாளர்களை பாராட்டி கருத்து தெரிவிக்கும் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உள்ளூர் ஊடகவியலாளர்களின் பிரச்சினைகள் மற்றும் ஆலோசனைகள் அடங்கிய பிரேரணை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

இந்தநிலையில், நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு பொறுப்பான கட்சிகளை உள்ளடக்கிய புதிய அரசியல் அமைப்பு நாட்டில் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தேர்தலை ஒத்திவைக்க தாம் ஒரு போதும் விரும்பவில்லை எனவும் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பொறுப்பு தமக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

புதுப்பிக்கப்பட்ட Google Map A மற்றும் B வீதி வரைபடங்கள் !

வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து Google Map A மற்றும்...

டிசம்பர் மாதத்தின் முதல் 8 நாட்களில் 50,000 ஐத் தாண்டிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தின் மத்தியிலும் சுற்றுலாப்...

தரம் 6 மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்ப காலம் நீடிப்பு!

இலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, தரம் 6 இல்...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு குவைத் தலைவர்கள் இரங்கல்.

குவைத் நாட்டின் தலைவர்கள் டிட்வா புயல்தாக்கத்தினால் துயரத்தில் வாடும் இலங்கை மக்களுக்கு...