காலிதா ஸியாவை முன்னரே விடுவித்திருந்தால் ஷேக் ஹசீனாவுக்கு இந்த நிலைமை வந்திருக்காது: ஜனாதிபதி

Date:

“ஷேக் ஹசீனா ஒரு படி முன்னதாகவே நடவடிக்கைகளை எடுத்து இருந்தால், இன்று பங்களாதேஷில் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டிருக்காது” என, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (06) முற்பகல் கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் ஆரம்பமான “2024 சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுகை” (ESG) மாநாட்டில் உரையாற்றும் போதே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“நமது நட்பு நாடான பங்களாதேஷின் அரசியலைப் பற்றி நான் பேச விரும்பவில்லை. ஆனால், அதைப் பற்றி நான் ஒன்றைக் குறிப்பிட வேண்டும்.

ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை விட்டு வெளியேறினாலும், நாங்கள் மிகவும் கடினமான சூழ்நிலையில் இருந்தபோது, அவர் நம் நாட்டிற்கு 200 மில்லியன் டாலர்களை வழங்கினார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

எனவே, இந்த நேரத்தில் உண்மையில் ஒரு நபரைப் பற்றி ஒரு நல்ல வார்த்தை கூறுவது நியாயமானது என்று நான் நினைக்கிறேன்.

இதேவேளை, காலிதா ஸியா, சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

ஷேக் ஹசீனா இதை முன்பே செய்திருந்தால், அவரால் இன்னும்பங்களாதேஷத்தின் பிரதம மந்திரியாக இருந்து இருக்கலாம். உலகின் நிலைமைகள் சரியில்லை என்பதை, இவ்வாறான நிகழ்வுகள் தெளிவுபடுத்துகின்றன” என்றார்.

( ஐ.ஏ.காதிர்கான்)

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...