‘கோழைத்தனமான செயல்’ : பேஸ்புக் பதிவை நீக்கியதற்கு மலேசியப் பிரதமர் கடும் கண்டனம்

Date:

ஹமாஸ் தலைவர் ஹனியா கொல்லப்பட்ட சம்பவம் குறித்த தனது ஃபேஸ்புக் பதிவை, ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளதற்கு மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் ஆகஸ்ட் 1ஆம் திகதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், ஹமாஸ் அதிகாரிகளுடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல் குறித்த காணொளி ஒன்றை தனது ஃபேஸ்புக்கில் பதிவேற்றி இருந்தார். அந்தப் பதிவை ஃபேஸ்புக் நிறுவனம் அகற்றிவிட்டது.

அந்தச் செயல் கோழைத்தனமானது என்று அன்வார் சாடியுள்ளார். ஜூலை 31 ஆம் திகதி ஈரானில், ஹமாஸ் தலைவர் ஹனியே படுகொலை செய்யப்பட்டதால் காஸா மோதல் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பரவக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

அன்வார், கடந்த மே மாதம் கத்தாரில் தாம் ஹமாஸ் தலைவர் ஹனியேயைச் சந்தித்துப் பேசியதாகவும், தனக்கு ஹமாஸ் அரசியல் தலைவர்களுடன் நல்ல நட்புறவு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், ராணுவ ரீதியில் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

“இது மெட்டாவுக்கு தெளிவான, சந்தேகத்திற்கு இடமில்லாத செய்தியாக அமையட்டும். கோழைத்தனமான இதுபோன்ற செயலை நிறுத்திக்கொள்ளுங்கள்,” என்று அன்வார் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அன்வாரின் பதிவுக்கு ஃபேஸ்புக் தளத்தின் மெட்டா நிறுவனம் உடனடியாகப் பதில் ஏதும் அளிக்கவில்லை.

இதுகுறித்து மெட்டாவிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. புகார் வந்ததால் பதிவுகள் நீக்கப்பட்டதா அல்லது அந்நிறுவனத்தால் நீக்கப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று மலேசிய அமைச்சர் ஃபாய்மி பாட்சில் கூறியுள்ளார்.

மெட்டா பாலஸ்தீனியக் குழுவான ஹமாஸை “ஆபத்தான அமைப்பாக” நியமித்துள்ளதுடன்  அதைப் புகழ்ந்து பேசும் உள்ளடக்கத்தையும் தடை செய்துள்ளது.

பிரதமரின் முகநூல் பதிவு ஏன் நீக்கப்பட்டது என்பது குறித்து METAவிடம் விளக்கம் கேட்டுள்ளதாக மலேசிய தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாய்மி பாட்சில்  தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...