‘கோழைத்தனமான செயல்’ : பேஸ்புக் பதிவை நீக்கியதற்கு மலேசியப் பிரதமர் கடும் கண்டனம்

Date:

ஹமாஸ் தலைவர் ஹனியா கொல்லப்பட்ட சம்பவம் குறித்த தனது ஃபேஸ்புக் பதிவை, ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளதற்கு மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் ஆகஸ்ட் 1ஆம் திகதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், ஹமாஸ் அதிகாரிகளுடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல் குறித்த காணொளி ஒன்றை தனது ஃபேஸ்புக்கில் பதிவேற்றி இருந்தார். அந்தப் பதிவை ஃபேஸ்புக் நிறுவனம் அகற்றிவிட்டது.

அந்தச் செயல் கோழைத்தனமானது என்று அன்வார் சாடியுள்ளார். ஜூலை 31 ஆம் திகதி ஈரானில், ஹமாஸ் தலைவர் ஹனியே படுகொலை செய்யப்பட்டதால் காஸா மோதல் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பரவக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

அன்வார், கடந்த மே மாதம் கத்தாரில் தாம் ஹமாஸ் தலைவர் ஹனியேயைச் சந்தித்துப் பேசியதாகவும், தனக்கு ஹமாஸ் அரசியல் தலைவர்களுடன் நல்ல நட்புறவு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், ராணுவ ரீதியில் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

“இது மெட்டாவுக்கு தெளிவான, சந்தேகத்திற்கு இடமில்லாத செய்தியாக அமையட்டும். கோழைத்தனமான இதுபோன்ற செயலை நிறுத்திக்கொள்ளுங்கள்,” என்று அன்வார் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அன்வாரின் பதிவுக்கு ஃபேஸ்புக் தளத்தின் மெட்டா நிறுவனம் உடனடியாகப் பதில் ஏதும் அளிக்கவில்லை.

இதுகுறித்து மெட்டாவிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. புகார் வந்ததால் பதிவுகள் நீக்கப்பட்டதா அல்லது அந்நிறுவனத்தால் நீக்கப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று மலேசிய அமைச்சர் ஃபாய்மி பாட்சில் கூறியுள்ளார்.

மெட்டா பாலஸ்தீனியக் குழுவான ஹமாஸை “ஆபத்தான அமைப்பாக” நியமித்துள்ளதுடன்  அதைப் புகழ்ந்து பேசும் உள்ளடக்கத்தையும் தடை செய்துள்ளது.

பிரதமரின் முகநூல் பதிவு ஏன் நீக்கப்பட்டது என்பது குறித்து METAவிடம் விளக்கம் கேட்டுள்ளதாக மலேசிய தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாய்மி பாட்சில்  தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...