Online Visa மீதான தடை: இலங்கைக்கு ஏற்படவுள்ள ஆபத்து

Date:

“நிகழ்நிலை விசா” (Online Visa) வழங்குவதை இடைநிறுத்தி உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளதால் இலங்கை மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய  தெரிவித்துள்ளார்.

இடைக்கால உத்தரவு காரணமாக விசா வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், நீதிமன்ற உத்தரவை மதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

எவ்வாறாயினும், உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவைப் பெற்றுக் கொள்ளாததால், எதிர்கால நடவடிக்கை குறித்து உறுதியாகக் கூற முடியாது எனவும் இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன் படி, எதிர்வரும் திங்கட்கிழமை விசா வழங்குவது தொடர்பில் நிச்சயமற்ற சூழல் நிலவுவதாகவும், அவ்வாறு நடந்தால் நாட்டின் நற்பெயருக்கும், பொருளாதாரத்திற்கும் பெரும் சேதம் ஏற்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

Popular

More like this
Related

A/L பரீட்சை விண்ணப்ப காலம் நள்ளிரவுடன் நிறைவு

2026 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது...

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...