சென்னை – யாழ்ப்பாணம் இடையே ஆரம்பமாகவுள்ள புதிய விமான சேவை

Date:

இண்டிகோ எயார்லைன்ஸ் நிறுவனம் சென்னையிலிருந்து  யாழ்ப்பாணத்திற்கு  புதிய விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த விமான சேவை அடுத்த மாதம் (செப்டம்பர்) 1ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் பிற்பகலில் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய சென்னை விமான நிலையத்தில் இருந்து பிற்பகல் 1.55 மணிக்கு புறப்படும் இண்டிகோ எயர்லைன்ஸ் விமானம், மாலை 3.10 மணியளவில் யாழ்ப்பாணம் விமான நிலையத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாலை 3.55 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5.10 மணியளவில் மீண்டும் சென்னை விமான நிலையத்தை வந்தடையும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...