தேர்தல் ஆணைக்குழுவின் போலி இணையத்தளம்: அதிகரிக்கும் முறைப்பாடுகள்

Date:

தேர்தல் சட்டவிதிகளை மீறியமை தொடர்பாக 8 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

தேர்தல் சட்டவிதிமுறைகளை மீறியமை தொடர்பாக 3 முறைப்பாடுகளும் தேர்தல் வன்முறை தொடர்பாக 5 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

அத்துடன்  ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக பெப்ரல் அமைப்புக்கு இதுவரை 68க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதேவேளை தேர்தல் ஆணைக்குழுவின் இணையதளத்தைப் போன்று  உருவாக்கப்பட்டுள்ள போலியான இணையதளம் தொடர்பாக விசாரணை  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கணினி அவசரபிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விடயம்  தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கணினி அவசரபிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சருக தமுணகல குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் 269 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்தில் 186 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்தில் 80 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதில், தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 266 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: 2021 தேர்தலைவிட 17% அதிக வாக்குப்பதிவு!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2021-ஐ ஒப்பிடும் போது பகல் 1 மணி...

‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ பெயரைப் பயன்படுத்தி நடைபெறும் மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை

‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’  நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி பாரிய நிதி மோசடி ஒன்று...