தேர்தல் கண்காணிப்புப் பணிகளுக்காக இலங்கை வரும்ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கும், வெளிவிவகார அமைச்சுக்கும் இடையில் நிர்வாக ஏற்பாடுகள்!

Date:

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கண்காணிப்புப் பணிகளுக்காக இலங்கைக்கு வருகை தரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கும், வெளிவிவகார அமைச்சுக்கும் இடையிலான நிர்வாக ஏற்பாடுகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கண்காணிப்புப் பணிகளுக்காக இலங்கைக்கு கண்காணிப்பாளர்களை அனுப்பி வைக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளரால் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஒன்றியத்தின் ஒழுங்குவிதிகளுக்கமைய தேர்தல் கண்காணிப்பு பணிகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் இலங்கைக்கு வருகை தரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கும், வெளிவிவகார அமைச்சுக்கும் இடையிலான நிர்வாக ஏற்பாடுகளில் கையொப்பமிடப்பட வேண்டும்.

அதற்கிணங்க, இருதரப்பினருக்கும் இடையில் கடந்த 5 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு தொடர்பான நிர்வாக ஏற்பாடுகளில் கையொப்பமிடப்பட்டது.

 

 

 

Popular

More like this
Related

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...

தேசபந்துவுக்கு எதிரான வழக்கு டிசம்பர் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

தேசபந்து தென்னகோன் மற்றும் பிற சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு டிசம்பர்...