தேர்தல் கண்காணிப்புப் பணிகளுக்காக இலங்கை வரும்ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கும், வெளிவிவகார அமைச்சுக்கும் இடையில் நிர்வாக ஏற்பாடுகள்!

Date:

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கண்காணிப்புப் பணிகளுக்காக இலங்கைக்கு வருகை தரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கும், வெளிவிவகார அமைச்சுக்கும் இடையிலான நிர்வாக ஏற்பாடுகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கண்காணிப்புப் பணிகளுக்காக இலங்கைக்கு கண்காணிப்பாளர்களை அனுப்பி வைக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளரால் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஒன்றியத்தின் ஒழுங்குவிதிகளுக்கமைய தேர்தல் கண்காணிப்பு பணிகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் இலங்கைக்கு வருகை தரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கும், வெளிவிவகார அமைச்சுக்கும் இடையிலான நிர்வாக ஏற்பாடுகளில் கையொப்பமிடப்பட வேண்டும்.

அதற்கிணங்க, இருதரப்பினருக்கும் இடையில் கடந்த 5 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு தொடர்பான நிர்வாக ஏற்பாடுகளில் கையொப்பமிடப்பட்டது.

 

 

 

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...