பங்களாதேஷில் போராட்டத்தின் எதிரொலி : பதவி விலகினார் உச்ச நீதிமன்ற நீதிபதி

Date:

மாணவர் அமைப்பினரின் தீவிர போராட்டத்தால் பங்களாதேஷின்  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவி விலகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

1971 பாகிஸ்தான் போரால் உயிரிழந்த வீரர்களின் வாரிசுகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக மாணவர் அமைப்பினர் அண்மையில் போராட்டம் நடத்தினர்.

 

மாணவர் அமைப்பினரின் இந்த போராட்டத்துக்கு பணிந்த ஷேக் ஹசீனா, பிரதமர் பதவியிலிருந்து விலகி இந்தியாவில் அடைக்கலமானார்.

இதையடுத்து மாணவர் அமைப்பினரின் கோரிக்கையை ஏற்று பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ்  இடைக்கால அரசின் தலைவராகவும் பதவியேற்றுக்கொண்டார்.

இந்தநிலையில் ஷேக் ஹசீனாவின் ஆதரவாளராக கூறப்படும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒபைதுல் ஹாசன் பதவி விலக வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

 

இந்த கோரிக்கையுடன் வங்கதேச உச்சநீதிமன்றத்திற்குள் நுழைந்த மாணவர்கள், தலைமை நீதிபதி ஒரு மணி நேரத்தில் பதவி விலக கெடு விதித்த நிலையில், நெருக்கடி அதிகரித்தமையினால் பதவி விலகுவதாக அறிவித்து ஒபைதுல் ஹாசன் பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...