பங்களாதேஷில் போராட்டத்தின் எதிரொலி : பதவி விலகினார் உச்ச நீதிமன்ற நீதிபதி

Date:

மாணவர் அமைப்பினரின் தீவிர போராட்டத்தால் பங்களாதேஷின்  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவி விலகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

1971 பாகிஸ்தான் போரால் உயிரிழந்த வீரர்களின் வாரிசுகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக மாணவர் அமைப்பினர் அண்மையில் போராட்டம் நடத்தினர்.

 

மாணவர் அமைப்பினரின் இந்த போராட்டத்துக்கு பணிந்த ஷேக் ஹசீனா, பிரதமர் பதவியிலிருந்து விலகி இந்தியாவில் அடைக்கலமானார்.

இதையடுத்து மாணவர் அமைப்பினரின் கோரிக்கையை ஏற்று பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ்  இடைக்கால அரசின் தலைவராகவும் பதவியேற்றுக்கொண்டார்.

இந்தநிலையில் ஷேக் ஹசீனாவின் ஆதரவாளராக கூறப்படும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒபைதுல் ஹாசன் பதவி விலக வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

 

இந்த கோரிக்கையுடன் வங்கதேச உச்சநீதிமன்றத்திற்குள் நுழைந்த மாணவர்கள், தலைமை நீதிபதி ஒரு மணி நேரத்தில் பதவி விலக கெடு விதித்த நிலையில், நெருக்கடி அதிகரித்தமையினால் பதவி விலகுவதாக அறிவித்து ஒபைதுல் ஹாசன் பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...