புகைப்படங்களை முகநூலில் பதிவேற்றியதால் மு. கா.உயர்பீட கூட்டத்திலிருந்து பிரதிப் பொருளாலர் யஹியாகான் வெளியேற்றம்!

Date:

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட கூட்டத்திலிருந்து கட்சியின் பிரதிப் பொருளாலரான ஏ.சி.யஹியாகான் வெளியேற்றப்பட்டார்.

முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இன்று கட்சியின் தலைமையமான தாருஸ்ஸலாத்தில் நடைபெற்றது.

இதன்போது , லுஹர் தொழுகைக்கான அதான் ஒலித்த வேளையில், கூட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில்,  யஹியாகான் எடுத்திருந்த படங்களை முகநூலில் பதிவேற்றம் செய்தார்.

விஷமிகளுக்கு கட்சியை அநாகரிகமாக முகநூலில் விமர்சிக்க இடமளித்தமையால் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், அவரை கூட்டத்திலிருந்து வெளியேற்றுவதாக அறிவித்தார் .

கட்சியில் யஹியாகானுடைய வகிபாகம் பற்றி பாராட்டியதோடு , இந்த முடிவை மனவருத்தோடு எடுக்கவேண்டிய நேர்ந்தது பற்றியும் தலைவர் தெரிவித்தார்.

தலைவரின் முடிவுக்குக் கட்டுப்பட்டு,  அவருடன் கைகுலுக்கி , முன்மாதிரியான முறையில் யஹியாகான் அங்கிருந்து வெளியேறிச் சென்றார்.

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன...

வியட்நாம் – இலங்கை இடையே 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 05...

தெனியாயவில் பரவும் காய்ச்சல் குறித்து ஆராய விசேட குழு!

தெனியாய வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே வேகமாகப் பரவி வரும்...

இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

2030- ஆம் ஆண்டுக்குள் ஆண்டு இருதரப்பு வர்த்தகத்தை ஒரு பில்லியன் டொலராக...