போர் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைந்துள்ளது: பதிலடிக்கு காத்திருங்கள்; ஹிஸ்புல்லா தலைவர்

Date:

லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தளபதி ஃபுவாத் ஷோகோர் ஹமாஸின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா ஆகியோரின் கொலைகளுக்குப் பிறகு இஸ்ரேலுடனான போர் “புதிய கட்டத்தில்” நுழைந்துள்ளதாக ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா தெரிவித்துள்ளார்.

இஸ்மாயில் ஹனியா மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலரின் இறுதிச் சடங்கு தெஹ்ரானில் நடைபெறுகிறது.

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி பிரார்த்தனைகளுக்கு தலைமை தாங்கியுள்ளார்.இந்த இரங்கல் கூட்டத்திலே ஹிஸ்புல்லா தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இஸ்மாயில் ஹனியாவின் தியாகத்திற்காக ஹமாஸின் தலைமைக்கு எனது இரங்கலையும் ஆசீர்வாதத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்,

அன்புள்ள தியாகிகளின்  குடும்பங்களுக்கு  எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதன் மூலம் சிவப்புக் கோட்டைத் தாண்டிவிட்டனர், மூத்த தளபதி ஃபுவாட் ஷோக்ரை படுகொலை செய்வதே எதிரியின் முக்கிய இலக்காக இருந்தது.

எதிரியும், எதிரிக்குப் பின்னால் இருப்பவர்களும், நமது தவிர்க்க முடியாத பதிலுக்காகக் காத்திருக்க வேண்டும்”” இனிமேல் எந்த விவாதமும் இல்லை. எங்களுக்கும் உங்களுக்கும் இடையே இருப்பது பகல், இரவுகள் மற்றும் போர்க்களம் மட்டுமே” என்று நஸ்ரல்லா இஸ்ரேலுக்கு மிரட்டல் விடுத்தார்.

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா கொல்லப்பட்டதை அடுத்து நிலைமை மீண்டும் மோசமடைவதற்கான சாத்தியக்கூறு அதிகரித்துள்ளது.

Popular

More like this
Related

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று...

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை ,...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....