மொட்டின் ஜனாதிபதி வேட்பாளர் தம்மிக்க பெரேரா !

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்படவுள்ளதாக மொட்டுக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி எதிர்வரும் 7ஆம் திகதி பொதுஜன பெரமுன வேட்பாளராக தம்மிக்க பெரேராவை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளது. இது தொடர்பான நிறுவன நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக கட்சி வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கட்சித் தலைமையகத்தில் எதிர்வரும் நாட்களில் பல சுற்று கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை இந்த வாரத்திற்கு முன்னர் அறிவிக்கத் தயாராக இருந்த போதிலும், நிலவும் சூழ்நிலை காரணமாக அது தாமதமானது.

ஜனாதிபதி வேட்பாளராக காத்திருக்கும் நால்வர் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்ற நிலையில் அவர்களில் பெரும்பாலானோர் தம்மிக்க பெரேராவுக்கு தமது விருப்பத்தை வெளிப்படுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...