தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் உட்பட அக்கட்சியின் பிரதிநிதிகள்,ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
இதேவேளை தேசப்பற்றுள்ள மக்கள் முன்னணியின் தலைவர் சுகத் ஹேவாபத்திரண உள்ளிட்ட அக்கட்சியின் பிரதிநிதிகள் குழுவும் தங்கள் ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளனர்.