2024 ஜனாதிபதித் தேர்தல்: 157 முறைப்பாடுகள் பதிவு

Date:

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மேலும் 20 சட்ட மீறல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சட்டத்தை மீறியமை தொடர்பிலேயே குறித்த முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேசிய தேர்தல் முறைப்பாடுகள் முகாமைத்துவ நிலையத்திற்கு இது போன்ற 11 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

சட்ட மீறல்கள் தொடர்பான எஞ்சிய முறைப்பாடுகள் 9 மாவட்ட தேர்தல் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கடந்த ஜூலை மாதம் 31ஆம் திகதி தொடக்கம் இதுவரையிலான காலப்பகுதியில் 157 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பொலிஸ் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று நடைபெறவுள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்யும் தினத்தன்று ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழுவில் முன்னெடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு திட்டம் குறித்து இங்கு ஆலோசிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...