2024 ஜனாதிபதி தேர்தல்;நாளாந்தம் அதிகரிக்கும் முறைப்பாடுகள்

Date:

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பதிவான முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு  தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜூலை 31ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் (30) வரை 1,482 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இவற்றில் வன்முறைச் சம்பவங்கள் குறித்து 07 முறைப்பாடுகளும், தேர்தல் சட்டத்தினை மீறியமை தொடர்பில் 1419 முறைப்பாடுகளும், 56 வேறு முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.

குறித்த முறைப்பாடுகளில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 612 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 870 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஸ்ரீலங்கா ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...