#Back to Glory: சமூக ஊடகங்களின் கருத்துக் கணிப்புக்கள் குறித்து அவதானம்!

Date:

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சமூக ஊடகங்கள் கருத்துக் கணிப்புக்கள் வெளியிடுவதைத் தடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பில் தேசிய தேர்தல் ஆணைக்குழு கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த வாரம் நடைபெறவுள்ள தேர்தல் ஆணைக்குழுக் கூட்டத்திலும் இதுபற்றி கலந்துரையாடப்பட உள்ளது.

இவ்வாறான கருத்துக்கணிப்புக்களால், சில வேட்பாளர்களுக்கு பாதக நிலைமை ஏற்படுவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த கருத்தக் கணிப்புக்களை மேற்கொள்ளும் தரப்புக்கள் யார் என்பது குறித்து கண்டறியும் நோக்கில், தேர்தல் ஆணைக்குழு ஆய்வு நடத்தியும் வருகிறது.

இந்த ஆய்வின் அடிப்படையில் கருத்துக்கணிப்புக்களை தடை செய்வதற்கான வழிமுறைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

இலத்திரனியல் அல்லது அச்சு ஊடகங்களில் நடத்டதப்படும் கருத்துக் கணிப்புக்களை இரத்து செய்வது இலகுவானது என்ற போதிலும், சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் கருத்துக்கணிப்புக்களை கட்டுப்படுத்துவது சவால் மிக்கது என்றும், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்

Popular

More like this
Related

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள...

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...