FIFA உலகக் கிண்ணத்தை நடாத்த மும்முரமாக தயாராகி வரும் சவூதி; 140க்கும் மேற்பட்ட உலக நாடுகள் ஆதரவு!

Date:

-எழுத்து- காலித் ரிஸ்வான்

2034 ஃபிஃபா உலகக் கோப்பையை சவூதி அரேபியாவில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு அரசாங்கம், மக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள்  தயாராகி வருவதாகவும் அண்மைக் காலங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்ததை யாவரும் அறிந்ததே.

சவூதி அரசாங்கம் தமது இலட்சிய திட்டமான விஷன் 2030 திட்டத்தின் கீழ் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் அந்நாட்டில் அபிவிருத்திகளை மும்முரமாக செய்து வருகின்றது. இவ்வபிவிருத்திகளை சுற்றுலா,பொருளாதாரம், தொழில்ட்பம், உட்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி, கலாச்சாரம் மற்றும் விளையாட்டு போன்ற சகல துறைகளையும் இலக்கு வைத்ததாக அமைகின்றன.

அந்த வகையில் 2034 FIFA கால்பந்தாட்ட உலகக்கிண் போட்டிகளை நடாத்துவதற்கான உத்திபயாகப்பூர்வ ஏலத்தில் சவூதி தனது ஏலப் புத்தகத்தை சமர்ப்பித்துள்ளது.

அதில் ஐந்து முக்கிய நகரங்களான ரியாத், ஜித்தா,அல்கொபார்,அபா மற்றும் NEOAM (இது சவூதியின் மிக முக்கியமான அதிநவீன நகர திட்டங்களில் ஒன்றாகும்)

போன்ற நகரங்களில் போட்டிகளை நடாத்துவதற்காக முன்மொழிந்துள்ளது. இவ் ஐந்து நகரங்களில் 11 புதிய மைதானங்கள் உட்பட 15 அதி நவீன மைதானங்கள் இடம்பெறும். புதிய மன்னர் சல்மான் விளையாட்டரங்கம் உட்பட 8 மைதானங்களை ரியாத் நகரில் அமையப்பெற்றுள்ளது. இதில் 92,000 பார்வையாளர்கள் வரை அமர்த்தப்படலாம்.

இதிலேயே தொடக்க மற்றும் இறுதி போட்டிகளை நடாத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயிற்சி முகாம்களுக்கான 10 இடங்கள் முன்மொழியப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவில் FIFA நடைபெறும் காலத்தில் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஐந்து நகரங்களும் 230,000 அறைகள் வரை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

15 நகரங்களில் மொத்தம் 132 பயிற்சி இடங்கள் முன்மொழியப்பட்டுள்ளதோடு 72 மைதானங்களும் முன்மொழியப்பட்டுள்ளன.

FIFA பார்வையிடட வரும் ரசிகர்களுக்காக 10 முக்கிய பொழுதுபாக்கு மற்றும் கொகாண்டாட்ட தளங்களும் இவ் ஏலப்புத்தகத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

மேற்கூறிய முக்கிய ஐந்து நகரங்களிலும் ஒவ்வொரு முக்கிய தளங்கள் தேர்தெடுக்கப்பட்டன. ரியாத் நகரில் உள்ள மன்னர் சல்மான் பூங்கா ஜித்தா வாட்டர் பிரண்ட் அபாவில் உள்ள அல் பிஹார் சதுக்கம் நியோமில் உள்ள மெரினா மற்றும் அல் கோபரில் உள்ள மன்னர் அப்துல்லா பூங்கா ஆகியவை இடம்பெற்றுள்ளன.

FIFA உலகக்கிண்ணப் போட்டிகளின் முன்னெப்போதும் நடந்திறாத பிரம்மாண்டமான ஒரு வடிவத்தை தமது நாட்டில் நடத்த சவூதி அரேபியாவின் முயற்சி தொடர்பான விபரங்களை 2034க்கான சவூதி அரேபியாவின் அதிகாரப் பூர்வ ஏலப்புத்தகத்தை பிரான்ஸின் பாரிஸில் நடைபெற்ற FIFA விழாவில் சமர்ப்பித்ததை தொடர்ந்து FIFA வெளியிட்டது.

‘Growing Together’ மகுட வாசகம் தாங்கி சமர்ப்பிக்கப்பட்ட இந்த ஏலப்புத்தகம் அந்நாட்டு தலைமைகளின் முழுமையான ஆதரவோடும் வழிகாட்டலோடும் தயார் செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டங்கள் அனைத்தைம் உள்ளடக்கிய ஏலப்புத்தகம்இ சவூதி அரேபியாவின் இந்நிகழ்வை கோலாகலமாக நடாத்துவதற்கான உயர்ந்த விரிவான திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை வெளிச்சமிட்டு காட்டுவதோடு, சவூதியின் வரலாற்று ரீதியான பெரிய மாற்றத்தையும் பிரதிபலிக்கிறது.

குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில், 2034 FIFA உலகக்கிண்ணத்தை நடத்தும் சவூதி அரேபியாவின் முயற்சிக்கு 140க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் இருந்து வரலாற காணாத ஆதரவு கிடைத்துள்ளது என்று சவூதி கால்பந்து சம்மேளனத்தின் (SAFF) தலைவர் யாசர் அல் மிசேஹால் உறுதி செய்துள்ளார்.

இது தரமான உலகக்கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டி ஒன்றை நடத்துவதற்கான சவூதியின் மீதான சர்வதேச சமூகத்தின் குறிப்பிடத்தக்க நம்பிக்கையை பிரதிபலிக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

‘இந்த உலகளாவிய நிகழ்வை நடத்துவதற்கான எங்கள் முயற்சியின் வெற்றிக்கு வழிவகுக்கும் வகையில் அனைத்து அரசாங்கத் துறைகளுக்கும் துளறகளுக்கும் இடையே முழுமையான ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு உள்ளதுஎனவும் ‘2034 இல் சவூதி மண்ணில் உதைப்பந்தாட்ட உலகக்கிண்ண வரலாற்றில் முன்னில்லாதவாறான ஒரு புது வடிவிலான போட்டியை நடாத்துவோம் என்றும் ரியாத் நகரில் நடைபெற்ற சவூதியின் ஏலப்புத்தக சமர்ப்பிப்பு குறித்த அதிகாரப்பூர்வ செய்தி மாநாட்டில் அல்மிசேஹால் கூறினார்.

மேலும், சவூதியின் விஷன் 2030 திட்டமானது குறிப்பிடத்தக்க பாரிய வளர்ச்சியை அந்நாட்டுக்கு அளித்துள்ளது எனவும், சவூதி அரேபியாவை உலகம் பார்க்கும் வகையில், கதவுகள் திறக்கப்பட்ட ஒரு நாடாகவும் ஆக்கியுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு FIFA இனை சவூதியில் நடாத்துவது அந்நாட்டு மக்களின் ஒரு பெரிய கனவாகும் என்றும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...