“நிகழ்நிலை விசா” (Online Visa) வழங்குவதை இடைநிறுத்தி உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளதால் இலங்கை மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இடைக்கால உத்தரவு காரணமாக விசா வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், நீதிமன்ற உத்தரவை மதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.