அரச ஓய்வூதியம் பெறாதவர்களுக்கு வழங்கப்படவுள்ள கொடுப்பனவு குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு

Date:

இலங்கையில் அரச ஓய்வூதியம் பெறாதவர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை சமூக பாதுகாப்பு சபை (Sri Lanka Social Security Board) ஆரம்பித்துள்ளது.

இதேவேளை ஒருவர் தமது சபையில் அங்கத்தவரானதன் பின்னர் அவருக்கான ஓய்வூதியம் தயாரிக்கப்படும் என அந்த சபையின் பொது முகாமையாளர் கே.ஏ.எஸ்.பிரசன்ன களுஆரச்சி (K.S. Prasanna Kalu Arachchi) தெரிவித்துள்ளார்.

அதன்படி, எதிர்வரும் காலங்களில் அரச ஓய்வூதியம் பெறாதவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியம் வழங்கும் நோக்கில் இந்தத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களை 011-2886 088 அல்லது 076-095-4002 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் சமூக பாதுகாப்பு சபையின் பொது முகாமையாளர் அறிவித்துள்ளார்.

இதேவேளை அரச ஓய்வூதியம் பெறுபவர்களின் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தமையும்  குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...