தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் உட்பட இருபதுக்கும் மேற்பட்டவர்களை ஈரான் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
நியூயோர்க் டைம்ஸின் அறிக்கையின்படி, இந்த சம்பவம் தொடர்பாக மூத்த புலனாய்வு அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் மற்றும் இஸ்மாயில் தங்கியிருந்த விருந்தினர் மாளிகையில் உள்ள ஊழியர்கள் உட்பட 24க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
புரட்சிகர காவலர் படையின் (IRGC) சிறப்பு புலனாய்வு பிரிவு இப்போது விசாரணையை முன்னெடுத்து வருகிறது, பொறுப்பானவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளது என்று நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.