ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் தடைபெற்றிருந்த பள்ளிவாசல்களின் பதிவு வேலைகள் மீண்டும் ஆரம்பம்

Date:

ஈஸ்டர் தாக்குதல்களுக்கு பின் நாட்டில் தடைப்பட்டிருந்த பள்ளிவாசல்கள் மீள பதிவு செய்வதற்கான வேலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டின் பின்னர் நாட்டில் புதிய பள்ளிவாசல்களை பதிவு செய்கின்ற நடவடிக்கைகளை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், அமைச்சின் உத்தரவுக்கமைய நிறுத்தி வைத்திருந்தது.

அதன்பின்னர் இவ்விடயம் சம்பந்தமாக பல முறை பல முயற்சிகள் இடம்பெற்றிருந்தது. இம்முயற்சிகள் அனைத்தும் கைகூடாமல் போனது.

தற்போது புதிதாக திணைக்களத்தின் பதில் பணிப்பாளராக கடமையை பொறுப்பேற்றுள்ள  M. H. A. M. றிப்லான், உதவிப் பணிப்பாளர்  M.S. அலா அஹமட் மற்றும் இலங்கை வக்ப் சபையின் உறுப்பினர் சட்டத்தரணி M.A. மத்தீன் ஆகியோர் இவ்விடயம் சம்பந்தமாக புத்தசாசனம் மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் மற்றும் செயலாளரோடு பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை முழு மூச்சாக நடாத்தி தடைப்பட்டிருந்த பள்ளிவாசல்கள் பதிவை மீண்டும் மீள ஆரம்பித்துள்ளார்கள்.

அதன் பிரகாரம் 01.08.2024 முதல் பள்ளிவாசல்கள் மீள்பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பதிவுச் சான்றிதழ்கள்,  பதிவு தபால் மூலம் பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

பாகிஸ்தானிலிருந்து மேலும் ஒருதொகை நிவாரணம் இலங்கைக்கு கையளிப்பு!

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பாகிஸ்தான் அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட மனிதாபிமான...

தஃவா அமைப்புக்களை பரஸ்பரம் புரிந்துகொள்ள வைப்பதில் பங்காற்றிவரும் அனர்த்த நிவாரணப்பணிகள்

அண்மையில் ஏற்பட்ட டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கம்பளை மற்றும் கெலிஓயா...

அவுஸ்திரேலியாவின் துப்பாக்கிச் சூடு குறித்து ஜனாதிபதி அனுர இரங்கல்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி, பொண்டி கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 16...

ஹமாஸின் மூத்த தளபதி ரேத் சயீத் காசாவில் படுகொலை!

காசாவில் ஹமாஸின் மூத்த தளபதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்...