ஜனாதிபதிக்கு சிலிண்டர் சின்னம்

Date:

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சிலிண்டர் சின்னம் தேர்தல் திணைக்களத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15ஆம் திகதி) இடம்பெற்றது.

இன்று காலை 9 மணிமுதல் 11 மணிவரை வேட்புமனுத் தாக்கல் செய்யும் காலமாகவும் 9 மணிமுதல் 11.30 வரை ஆட்சேபனைகளை தெரிவிக்கும் காலமாகவும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

அதன் பிரகாரம் 40 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியிருந்தனர். என்றாலும், 39 வேட்பாளர்கள் மாத்திரமே வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தனர். இவர்கள் அனைவரதும் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்தது.

இந்த நிலையில் 3 ஆட்சேபனைகளும் முன்வைக்கப்பட்டிருந்தன. என்றாலும், தேர்தல் சட்டத்தின் 14, 15 பிரிவுகளின் கீழ் குறித்த 3 ஆட்சேபனைகளும் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்தது.

இதேவேளை தமிழ் பொது வேட்பாளரான பா.அரியநேந்திரன் போட்டியிடும் சின்னம் சங்கு என அறிவிக்கப்பட்டுள்ளது

Popular

More like this
Related

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...

சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைப்பு!

சிலாபம் மாவட்ட பொதுத் தள வைத்தியசாலையின் பாவனைக்காக அண்ட்ராய்ட்  இரத்த அழுத்தக்...

“இஸ்ரேலுக்கு இருக்கும் ஒரே பலத்த கூட்டாளி டிரம்ப் மட்டுமே”: டிரம்ப் – ஈரான் ஒப்பந்தத்தை விமர்சிக்க வேண்டாம் என ஜே.டி. வான்ஸ் எச்சரிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் மேற்கொண்டுள்ள சமாதான ஒப்பந்தத்தைப் பகிரங்கமாக...