ஜப்பான் பிரதமர் இராஜினாமா

Date:

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா வரும் செப்டம்பர் மாதம் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் நேற்று அவர் உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதன்படி அடுத்த மாதம் தனது கட்சித் தலைமை மற்றும் பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

“ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவராக நான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை என்று முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். புதிய எல்டிபியை பொதுமக்களுக்கு தெளிவான முறையில் வழங்குவது அவசியம்” என்று கிஷிடா செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

“எல்டிபி மாறும் என்பதைக் காண்பிப்பதற்கான மிகத் தெளிவான வழி, நான் பதவி விலகுவதுதான்.” எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Popular

More like this
Related

நாட்டின் கரையோரப் பகுதிகளில் பலத்த மழை

சிலாபம் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கரைக்கு...

“பாபர் மசூதி இடிப்பு பற்றி கருத்து தெரிவிப்பது தேசவிரோதமல்ல”: மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்டிருக்கக் கூடாது என்ற கருத்தை வெளிப்படுத்துவதை...

ஹட்டன் கல்வி வலய பாடசாலைகள் நாளைமுதல் வழமைக்கு!

மோசமான வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த ஹட்டன் கல்வி மண்டலத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும்...

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது!

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (05) லஞ்ச...