தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு!

Date:

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் இன்று நள்ளிரவுடன் நிறைவடைய உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று நள்ளிரவின் பின்னர் அனுப்பப்படும் எந்தவொரு விண்ணப்பமும் பரிசீலிக்கப்படாது எனவும் தபால் வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்கும் திகதி மீண்டும் நீட்டிக்கப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் விண்ணப்பங்களை வழங்காதவர்கள் உடனடியாக தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 14 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களுக்கான கட்டுப்பணத்தை செலுத்தும் கால எல்லையும் நிறைவடையும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதனையடுத்து, 15 ஆம் திகதி காலை 9 மணிமுதல் பகல் 12 மணிவரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட உள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அதேபோன்று, தேர்தல் பிரச்சினைகளை தீர்க்கும் மையங்கள் மாவட்ட மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டு, அதற்கு பொலிஸார் தமது ஆதரவை வழங்கியுள்ளதுடன், குறித்த மையங்கள் தொடர்பான தொலைபேசி இலக்கங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் சட்டம் நடைமுறையில் இருப்பதால் தேர்தல்கள் ஆணைக்குழு பிறப்பித்துள்ள வழிகாட்டுதல்கள் மற்றும் உத்தரவுகளை அனைத்து அரச நிறுவனங்களும் பின்பற்றுவது மிகவும் முக்கியம் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...