நாட்டில் பொது ஒழுங்கைப் பேண ஆயுத படைகளுக்கு அழைப்பு

Date:

நாட்டில் குறிப்பிட்ட பகுதிகளில் பொது ஒழுங்கைப் பேணுவதற்காக அனைத்து ஆயுதப் படை உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் 2024 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படையைச் சேர்ந்தவர்களுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நிர்வாக மாவட்டங்களில் பொதுப் பாதுகாப்பைப் பேணுவதற்கும்  அத்தகைய மாவட்டங்களுக்கு அருகிலுள்ள பிராந்திய நீரைப் பராமரிப்பதற்கும் பொலிஸ் அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கு இராணுவம்,  கடற்படை மற்றும் விமானப் படைகளை அனுப்புவதற்கு வர்த்தமானி வழிவகுக்கின்றது.

 

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...