வான் சாகசத்தில் ஈடுபட்ட இரு இராணுவ வீரர்கள் படுகாயம்

Date:

 

வெல்லவாய ஊவா குடாஓயா கமாண்டோ ரெஜிமெண்ட் பயிற்சி நிலையத்தில் இன்று சனிக்கிழமை (03) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வான் சாகச நிகழ்வின் போது இடம்பெற்ற விபத்தில்  இரண்டு இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையத்தில் பயிற்சிகளைப் பெற்று வெளியேறும் இராணுவ வீரர்களுக்காக விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது, வான் சாகசத்தில் ஈடுபட்ட இரண்டு வீரர்களே விபத்தில் சிக்கியுள்ளனர். இவர்களில் ஒருவரது பரசூட் மரங்கள் நிறைந்த பகுதியிலும் மற்றையவரது பரசூட் தரையிலும் விழுந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த இரண்டு வீரர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், இந்த நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேயும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...