ஹமாஸ் தலைவர் மீதான மலேசிய பிரதமரின் பதிவுகளை நீக்கியதற்கு மெட்டா மன்னிப்பு கோரியது

Date:

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ( Ismail Haniyeh ) கடந்த வாரம் கொல்லப்பட்டது தொடர்பான மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளில் இருந்த பதிவுகள் நீக்கப்பட்டதற்கு Meta  மன்னிப்புக் கோரியுள்ளது.

இஸ்மாயில் ஹனியே மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் பதிவுகள் நீக்கப்பட்டதை அடுத்து Meta-விடம் மலேசியா விளக்கம் கேட்டிருந்தது.

பிரதமரின் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இருந்த உள்ளடக்கம் அகற்றப்பட்டு, சரியான செய்தி மதிப்புள்ள லேபிளுடன் உள்ளடக்கம் மீண்டும் இடம்பெற்றுள்ளதாக Meta செய்தித் தொடர்பாளர் ராய்ட்டர்ஸ்ஸிடம் எழுப்பிய கேள்விகளுக்கு மின்னஞ்சல் மூலம் பதிலளித்தார்.

மலேசியா தொடர்பு அமைச்சர் மற்றும் பிரதமர் அலுவலக உறுப்பினர்கள் திங்களன்று Meta பிரதிநிதிகளை சந்தித்து விளக்கம் கேட்டிருந்தனர்.

Meta -வின் செயல்கள் பாராபட்சமானது, அநீதியானது மற்றும் கருத்துச் சுதந்திரத்தை அப்பட்டமாக நசுக்குவதாகக் கருதுகிறது என்று பிரதமர் அலுவலகம் திங்களன்று ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தது.

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...