அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்குச் சீருடை !

Date:

பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் மேற்கொள்ளும் சேவையைப் பாராட்டி, அவர்களை ஊக்குவிப்பதற்காகத் தற்போது 5,000 ரூபாய் வருடாந்த ஆசிரியர் கொடுப்பனவு வழங்கப்படுகிறது.
குறித்த கொடுப்பனவுக்கு மேலதிகமாக 2022 ஆம் ஆண்டுவரை அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு சீருடை வழங்கப்பட்டுள்ளதுடன், தற்போது சீருடை வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்படவில்லை.
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்குச் சீருடை வழங்குதல் தொடர்பாகப் பௌத்த சாசன, மத மற்றும் கலாச்சார அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவைக் கருத்தில் கொண்டு, 2025 ஆம் ஆண்டில் அனைத்து மதங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு 5,000 ரூபாய் ஊக்குவிப்புக் கொடுப்பனவு மற்றும் 2,500ரூபாய் சீருடைக் கொடுப்பனவு என்ற வகையில் வருடாந்தம் 7,500ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...