ஆறு மாகாண ஆளுநர்கள் இராஜினாமா: வர்த்தமானி வெளியீடு

Date:

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் உட்பட்ட ஆறு மாகாண ஆளுனர்களின் இராஜினாமா விபரங்களை ஜனாதிபதி செயலகம் வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.

இதேவேளை வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு வடமாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் அவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தனது இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கீழ் புதிய அரசாங்கம் அமைக்கப்படவுள்ள நிலையில், அமைச்சர்கள், ஆளுநர்கள் என பலர் தங்களது பதவிகளை இராஜினாமாக்களை அறிவித்தனர்.

அதற்கமைய, வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத், மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே, மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்க, தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, ஊவா மாகாண ஆளுநர் அநுர விதானகே, வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், வடமேல் மாகாண ஆளுனர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் ஆகியோர் தமது ஆளுனர் பதவிகளிலிருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தகக்கது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...